சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

உனக்கானது




இது உனக்கானது
ஊமை விழிகளால்
மெளனம் சாதிக்கும்
உனக்கானது

பூக்களை நேசிக்கிறாய்
பூ வைக்க மறுக்கிறாய்
நாகரீகம் தடுக்கிறதா பெண்ணே?

விஞ்ஞானம் சொல்கிறது
மல்லிகை கொண்ட வாசம்
மனதை சாந்தமாக்கும்
மாயம் என்று

நானும் அதைத்தான்
சொல்கிறேன்
சூடிக்கொள்
எல்லோர் மனதையும் 
உன்னால்
இலகுவாய்
படிக்க முடியும்