சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

கலைந்த கோலம்



வானவில்லின் வண்ணங்களை 
குழைத்து தீட்டிய
வர்ணக்கோலம்
கறைபட்டு 
கசங்கிக் கிடக்கிறது 

காற்றில் கலந்த புழுதி 
மண்டி மண்டி 
மானம் இழந்து கிடக்கிறது 

கண்ணில் தெரிவதெல்லம் 
காட்சியென்று 
ரசிக்கின்றாயா.... 

பாவம் அந்த ஓவியம் 
நீ 
வண்ணம் தீட்ட மாட்டாயா...