சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

:: கவிதை ::

இயற்கை!



வண்ணச் சித்திரமாய்
இயற்கையின் பிரசவமாய்
கொட்டிக்கிடக்கும் அழகு

விண்ணில் தெறித்த நட்சத்திரம் 
மண்ணில் விதைத்த புற்கள்
 நட்டுவைத்த பூச்செடிகள்
வண்டுகள் தேடும் தேன்துளி

விட்டுவிட்டு பறக்கும் வண்ணாத்தி
கூவிப்பாடும் குயில்கள் 
ஆடிக்களிக்கும் மயில்கள்

* * * * *

மனைவி!


அன்னையின் அடுத்தபடி
பெண்மையின் பூரணத்துவம்
மனைவி என்னும்
அடுத்த படி

பொறுமை வாங்கி வருவாள்
பிறந்த வீட்டில்
அன்பை அள்ளி கொடுப்பாள்
புகுந்த வீட்டில்

எத்தனை பாத்திரம்
வாழ்வின் நாடகத்தில்
இவள் ஒருத்திக்கு

* * * * *

அன்னை!


கருவாக்கி எம்மை
உருவாக்கி
பாலூட்டி பின்
சோறூட்டி

சீராட்டி தாலாட்டி
தட்டியும் பின் கட்டியும்
கனவு கண்ட பிள்ளையினை
நனவாக்கி பார்த்தவளே

அன்னையெனும்
தெய்வமே!

* * * * *