இயற்கை!
இயற்கையின் பிரசவமாய்
கொட்டிக்கிடக்கும் அழகு
விண்ணில் தெறித்த நட்சத்திரம்
மண்ணில் விதைத்த புற்கள்
நட்டுவைத்த பூச்செடிகள்
வண்டுகள் தேடும் தேன்துளி
விட்டுவிட்டு பறக்கும் வண்ணாத்தி
கூவிப்பாடும் குயில்கள்
ஆடிக்களிக்கும் மயில்கள்
* * * * *
அன்னையின் அடுத்தபடி
பெண்மையின் பூரணத்துவம்
மனைவி என்னும்
அடுத்த படி
பொறுமை வாங்கி வருவாள்
பிறந்த வீட்டில்
அன்பை அள்ளி கொடுப்பாள்
புகுந்த வீட்டில்
எத்தனை பாத்திரம்
வாழ்வின் நாடகத்தில்
இவள் ஒருத்திக்கு
* * * * *
* * * * *
அன்னை!
கருவாக்கி எம்மை
உருவாக்கி
பாலூட்டி பின்
சோறூட்டி
சீராட்டி தாலாட்டி
தட்டியும் பின் கட்டியும்
கனவு கண்ட பிள்ளையினை
நனவாக்கி பார்த்தவளே
அன்னையெனும்
தெய்வமே!
* * * * *