சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

காதல்

கண்கள் பார்த்து 
மனதின் சுவர்கள் மீது 
உணர்வுகள் எழுதும் கவிதை 
அந்தக் காதல்

அன்பு மட்டும் எதிர்பார்ப்பாய்
அழகு வேண்டம் 
உன் மனது வேண்டும் 
உன் பாசம் வேண்டும் 
இதயம் பேசும் வார்த்தைகள் 
அந்தக் காதலில்

அழகு 
அந்தஸ்த்து 
சொத்து 
காமம் 
மட்டுமே நிறைந்து வழிகிறது 
இந்தக் காதலில்

பிடித்தால் வாழ்கை வரை தொடரும் 
இடையில் வெறுத்தால்
முறித்துக் கொள்ளளாம் 
விவாகரத்துப் பெறலாம்
குழந்தை பெறலாம் 
பெயர் வைக்கலாம் 
தந்தையின் பெயர் மாறலாம் 
கணவன் மனைவி உறவுகள் மாறாலாம் 

இன்றைய காதல் இதுதான் 
வலிக்கிறது மனம் 
என் தலைமுறையின் நிலைகண்டு 
தவிக்கிறது காதல்