சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

அழுகை

 
ஏன் இந்த கண்ணீர்
காலம் செய்த கோலமா
கனவுகள் தொலைந்த நேரமா
 
மனதின் ஓரங்களில்
விழுந்த வலியா
விழி நனைத்து
கன்னத்தின் வழி இறங்கிய
கவலையின் வெளித்தோற்றமா
 
அழகிய வதனம்
கறைபட்டு விடுமோ
நீவிய கூந்தல் சிதறிவிடுமோ
வெள்ளை மேனி
சிவந்துவிடுமோ
விரல் வரைந்த ஓவியம்
கரைந்திடுமோ
கவலை தந்த - இந்த
அழுகையினால்