சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

ஞாபகம்





சின்னஞ்சிறு குழந்தைகள்
வஞ்சம் இல்லா நெஞ்சமது
அன்பு மட்டும்

நிறைந்திருக்க
வாஞ்சையுடன் கரம் பற்றி
களிக்கின்றது இன்பமதை

கடலோரம்
காற்றுவாங்கி
ஈரக்காற்றினிலே
மனம் நெகிழ்ந்து
இன்புறும் நிமிடங்கள்
இல்லையப்பா இப்போது

காலம் மாறி
காட்சி மாறி
காற்றுவாங்க 
நேரமில்லை இப்போது
அந்த நினைவு மட்டும்
நிக்கிறது இப்போது.........