பிஞ்சு முகம்
வெள்ளைப் புன்னகை
விசமில்லா வாசம்
விரும்பும் மகிழ்ச்சி
பட்டுப்போல் மேனி
பவலவாய் சிவக்க
சிரிக்கின்ற கண்கள்
கள்ளமில்லா உள்ளம்
கணவுலக எண்ணம்
எத்தனை எத்தனை நினைவுகள்
குழந்தை போல் இன்பம் உண்டோ
முத்துப் பற்கள்
பிஞ்சு விரல்கள்
தத்தித்தாவி தவழ்ந்தும்
விழுந்தும்
பின் எழுந்தும்
எட்டி எட்டு நடை பயின்று
பின் வென்று
ஆகா எத்தனை எத்தனை
இன்பமடா..