சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

கனவு


விழிகள் விரும்பி வாங்கிய
வலிகள் ஆகிவிட்ட 
விசித்திர உலகம்
இந்தக் கனவு

சிரிப்புக்களை விஷமாக்கி 
நிஜங்களை மரணமாக்கி
விந்தை செய்கின்ற
கனவுகள்

செல்லும் இடமெலாம் 
துரோகங்கள் 
சீர்கேடுகள்
சின்னாபின்னங்கள்
சினக்கின்றது மனம் - பின் 
எப்படி 
ரசிக்கும்
கனவு தரும் 
நம் மூளை???