சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

மலர்கள்


மென்மையின் உறைவிடம்
பசுமையின் பிறப்பிடம்
இந்த மலர்கள்
 நந்தவன  பட்சிகள்

சில காலம் வாழ்ந்தாலும்
சிறப்பாக சிரிக்கின்ற
சிறுபிள்ளை சிற்பங்கள்

இதல்கொண்டு மணம் தந்து
மது போல தேன் சிந்தி
மலர்நாட வண்டழைத்து
வருங்கால  இயல்பனைத்தும்
 ஒன்றாக்கி
கொடுத்தனுப்பி
சேமிக்கின்ற குணமென்ன

அகமெல்லாம் நிறைந்தாகி
மெளனத்தின் சுவைகான
என் நினைவனைத்தும்
நிறம்ப வைக்கும்
மலர்வனமே
உன்போல உறவுண்டோ
இவ்வுலகில்