மழைவிழும் நேரம்
என் விழிவழி வழியும் கண்ணீர்
யார் அறிவார்
தண்ணீரில்
மீன்கள் அழுவது போல்
என் கண்ணீரும்
தண்ணீராய் தெரிகிறது
காற்றடைத்த நுரையீரல்
கனமாய் உணர்கிறேன்
இரத்தக்குழாய்கள்
சுருங்க மறுக்கின்றது
ஒவ்வொரு செல்களும்
வலிகளை பிரசவிக்கின்றது
வதனத்தில் வாட்டம்
காட்டவில்லை
உடைகளில் சிக்கனம்
பேணவில்லை
ஆதலால்
என்னிலை
யார் அறிவார்....
என் விழிவழி வழியும் கண்ணீர்
யார் அறிவார்
தண்ணீரில்
மீன்கள் அழுவது போல்
என் கண்ணீரும்
தண்ணீராய் தெரிகிறது
காற்றடைத்த நுரையீரல்
கனமாய் உணர்கிறேன்
இரத்தக்குழாய்கள்
சுருங்க மறுக்கின்றது
ஒவ்வொரு செல்களும்
வலிகளை பிரசவிக்கின்றது
வதனத்தில் வாட்டம்
காட்டவில்லை
உடைகளில் சிக்கனம்
பேணவில்லை
ஆதலால்
என்னிலை
யார் அறிவார்....