வெள்ளைக் கம்பளம் மீது
தொட்டுவைத்த கருவண்ண
விழி
வண்ணம் தீட்டி வைத்த
இமைகள்
நீழலிலும் நிஜம் போல்
வசிகரிக்கும்
விழிகள்
இயற்கைதனை பட்டைதீட்டி
மெருகேற்றி வைத்த
புருவம்
இரு புருவத்தின் மத்தியில்
ஒட்டிவைத் சுட்டித்திலகம்
அதன் மேலே
தமிழின் பெருமை சொல்ல
இட்டுக் கொண்டாய்
குங்குமமும்
மங்களமாய்