சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

மாளிகை

வண்ணச் சித்திரமாய்
வாழ்கை தேடும்
மானிடம்

கிறுக்கள் சித்திரமாய்
மாறிவிட்ட ஆதங்கம்
மனமெல்லாம் கொந்தளிக்கும்
தீராத ஆசைகள்
உள்ளே உளன்று துடிக்கும்
உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்
உத்வேகம்
எழ நினைக்கும்
விழுந்த வலிகள்
தடம் போடும்
தவறுகள்
தனிவழி சமைக்கும்

அனுபவச் சிப்பிகளை
துணைகொள்
நம்பிக்கையில்
அத்திவாரம் இடு
மாளிகை போல்
அடுக்கடுக்காய்
வாழ்வு வரும்
வசந்தம் தரும்