எப்படிச்சொல்ல
எழுத்தென்று சொல்லவா
எண்ணம் என்று வடிக்கவா
வர்ணம் தீட்டி ஓவியமாக்கவா
உள்ளுக்குள் உதித்து
வெளிவந்து விழுந்து
விண்ணுக்கு பந்தம் கொடுத்தாள்
மண்கொண்ட சொந்தம்
இவள் தந்த பந்தம் அல்லவா
தியாகத்தின் உதயம்
தீராத பாசம்
தெவிட்டாத அன்பு
காண்கின்ற தெய்வம்
கருணையின் வடிவம்
தாய்மைபோல்
ஏது உணர்வு கண்டதிங்கு
நீடிக்கும் மனிதம்
தந்த ஒன்றில்
தரம் உயர்வாய்
தந்த ஒன்று
அம்மா...