சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

கடந்தவை

கண்ணிமைக்கும்
நொடிபோல
காலங்கள் கரைந்தாலும்
கரைபடிந்த நினைவுகளை
களற்றிடமுடியாது

குழந்தையாய் பிறந்தபோது
குருதிகொட்டி பிறந்திட்ட
காரணத்தால்
தொடர்நாட்கள் முழுவதுமாய்
வேதனைகள் சொந்தமென்று
ஆனதுவோ

வயதுகள் மறைவதற்கு
மறக்கவில்லை
நம் கனவுகள் மட்டும்
மறையாமல்
வதைக்கின்றதே
கடந்தவை கடந்தவையாய்
இல்லாமல் இருப்பதும்
ஏனோ

எண்ணங்கள் கடக்காமல்
காலத்தால் நினைவூட்டி
சலனப்படுத்திடுதே
என்சேய்வோம்