சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

கிளிகள்

சோடிக் கிளிகள் 
சோகம் 
மறந்து 
குழவும் இன்பம் 


கூடிவாழும் மானிடம்
 மறந்ததேனோ... 
பகுத்தறிவை
 பிரம்மன் படைத்ததாலோ...  

பாசப் பறவைகள் 
இவை
 நாமெல்லாம் 
வேசம் போடுகின்றோம் 

வர்ணங்கள் பலவானபோதும் 
பேதமில்லா 
காதல் பறவைகள்
 இவை
 பேதம் காண்பதே 
நம் கொள்கை 
இங்கே...