சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

மழை


சிந்தும் நீர் திவளை கோர்த்த 
சினுங்கும் மழைத்துளிகள்
 மண்ணில் முத்தமிட 
மங்கை உடல் நனைத்ததுவோ... 


இல்லை 
அவள் சிரிக்க மெய்சிலிர்க 
வெட்கம் ரசிக்க  
வின்னில் இறங்கி 
அவளில் விழுந்ததுவோ 

காய்ந்த மரங்கள் சிலிர்க்க 
கிளை தழுவி நழுவி
 நனைத்ததுவோ
 நிலம் படர்ந்து 
தரைமேல் நடந்து 
தவழ்ந்ததுவோ..