உடைகள் மொத்தமாய்
உன்
தமிழின் வார்ப்பாய்
சொக்கி நிற்கின்றது
நளினம் கலந்து
வாள்விழி நீண்டு
அதன்மேல் பதித்த
நீள் புருவக் கவசம்
ஓர் காவியம் சொல்கின்றது
விரல் நுனிவரை
வண்ணம் தீட்டி
அழகாய்
நீ கொடுக்கும் நளினம்
வனப்பின் வார்பினை
செதுக்கி நிற்கின்றது
இதல் பேசா வார்த்தையும்
விழிபேசும்
சுவறின்றி விரல் தீட்டிய
ஓவியம்
உடைகள் சொல்லும்
கதைகள்
உச்சிமுதல்
பாதம் வரை
ஒவ்வொன்றாய்
கொட்டிக்கிடக்கிறது
நளினத்தின் சிறப்பு
உன்னில்தான்