சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

திருமணம்

 
சொர்க்கத்தில் நிச்சயமாம்
இவ்வுலகின் பந்தமாம்
புதுமணமாய்
திருமணம்
சம்பிரதாயம் சொல்கின்றது...

 
தொல்லை பேசியில்
தினம் தொல்லை கொடுத்த
காதலாய்
இணையத்தில்
இணைந்து நின்ற இளைய
காதலாய்
மாறிப் போன திருமணம்
 
இன்று பார்த்து
நாளை பேசி
மறுநாள் சுற்றி
மாலைமாற்றிக் கொண்ட
மணவாழ்க்கை
திசைமாறி திண்டாடி
ரத்தாகி போகின்றதே
இன்று..
 
சுற்றம் பார்த்து
சம்பிரதாயம் சாட்சி சொல்லி
சடங்கில் திளைத்து
சந்தோசம் கொண்டாடும்
திருமணங்கள்
எங்கே...