சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

காத்திரமாய் நீ

கனவுகள் நிறைந்த விழிகள் 
மலர்கள்  சூடிய  கூந்தல்
தமிழ் மணம் கமழும்  உடைகள்
உன் சொந்தம்


அழகிற்கு அழகு சேர்க்கும்
உடைகள்
நளினம் கலந்த பேச்சு
அளவாய் புன்னகை

இயற்கையினை நேசிக்கும்
உன் ஒவ்வொரு
அங்கங்களும்
புதுமைதான் இப்போது

எப்படியும் வாழும் வாழ்க்கையில்
நீ புதுவிதம்
கவிதைத்தனமாய்
உன் வாழ்வியல்

காத்திரமாய் நீ
கனவுகளில் நிஜத்தினை மறந்த
உலகத்தின் ஜீவன்கள்
மத்தியில்