சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

தேவதை


யார் இவள்.... 
தேவதையா 
வேற்றுக்கிரக பெண்ணிவளா 
மாறிப்போன மானிடத்தின் வாழ்வியலில் 
மூழ்கி திளைத்த கன்னியிவளா

ஆயிரமாயிரம் கேள்விகளை
நீ தொடுத்தாலும்
 விடையும் கேள்விதான் 
இறுதியில்

 நீலக்கண்கள் 
சொல்ல நினைப்பதென்ன 
விரல்தொடும் அதரங்கள் 
அமுதமொழி கொண்டு 
வடித்திடும் வார்த்தை என்ன 
மென்மையின் பிரசவிப்பில் 
மலர்ந்த பூக்களிற்கு 
மின்சார பூக்கள் இணையாகுமா... 

வெண்ணிற மேனியில்
தெரிவதென்ன
சித்திரம் வரையும் சுவர்களா
அவை...
போதும் நிறுத்திவிடுகிறேன்
 வேண்டாத கேள்விகளை