சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

:: மரபுக்கவிதை ::

பெண்!


சுட்டித்திலகமிட்ட புருவம்
கட்டித்தங்கம் நனைத்த மேனி
கொடியிடை 
கொவ்வையிதல்
குவித்த புன்னகை

தழில் தவழும்
தேன் நாவில் விளையாடும்
குழல் களையும்
கூதல் காற்றில்

கொள்ளை அழகில்
ரசிக்கும்
பெண்ணிவள்
தமிழ் பெண்ணிவள்

* * * * *
மழை!


வர்ண சொற்பன -வான் 
வெளிதனில் 
மின்னி முழங்கி தூறிடு
திவளையாய் 
திரண்ட நீர் துளியதே

செங்கமல தாழ் விழுந்து
புரன்டோடி
கழிப்புண்டு - ஆழி
நாடிய நீர் துளியதே

மண் செழிக்க
பாய்ந்தோடி -அங்கே
பரவிக் கிடந்து - மரம்
உறிஞ்சிக் குடித்து
மகிழ்ந்த நீர் துளியதே

மாரி கண்ட மழையெல்லோ
இது மாரி மழையெல்லோ


* * * * *