சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

காலைப் பொழுது




விடியும் காலை
விழிகளிற்கு விருந்து
விருப்பங்களிற்கு இன்பம்


பொட்டுவைத்த நிலா போல்
அடிவானில் கதிரவன்
அலைமோதா
அமைதிக் கடல்
சுகமான பொழுது

நீல வண்ணத்திரை
அழகாய் வரைந்த
சித்திரம்
ரசிக்கும் மனதின்
உச்ச இன்பம்