சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

கோலம்

 
அதிகாலை வானில்
வட்டமிடும் பட்சிகளின் பாட்டோடு
கண்விழித்து
நீராடி...

முற்றம் முழுதாய் தூய்தாக்கி
முடிக்காத முற்றுப்புள்ளிகள்
முடிக்கும் முடிவில்
வண்ணக் கோலம்
வந்து நிற்கும்

தெருவெல்லாம்
வித விதமாய்
வரைந்துவைத்த சித்திரம் போல்
சிரிக்கும் கோலங்கள்
சேதி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்
அழகான பெண்டியரும்
உள்ளர் இங்கு என்பதையும்

இப்போது
கோலமெங்கே போனதப்பா
ஒட்டும் நிலையில் நிற்குதப்பா...
என்ன செய்வம்...
பெருமூச்சு முட்டுதடா...